Posts

அதிகம் வாசிக்கபட்ட பதிவு

அவளும் ! நானும் ! நீங்களும் !

ஆண்டு 2011 வீட்ல பொண்டாட்டி தொல்லை போல அதான் வீட்டுக்கு போக மனசில்லாம வண்டிய நிப்பாட்டிவச்சுருக்கான் என்றார் எதிரில் இருந்தவர், பாவம் அவருக்கு தெரியாது கடவுள் ஏன் திருச்சி ரயில்நிலையத்தில் அரைமணிநேரமாக ரயிலை நிறுத்திவச்சுருக்கார்னு ! என் ஹெட்போனில் ஜி வி பிரகாஷ் கத்திக்கொண்டு இருந்தார் ! யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ !   அந்த ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட தேவதை அவள் அப்பா அம்மாவுடன் வந்து எனக்கு எதிர்சீட்டில் அமர்ந்தாள். சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஆயாசமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரு நொடி ஒரு சிறு பார்வை என் பக்கம் வீசினாள். ஜி வி பிரகாஷின் தொடர்ந்து பாடினார். அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா ! உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா ! நா தலகாலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே ! ஆடுகளம் பாட்டுக்கும், அவளின் ஒரே நொடி காந்தப்பார்வைக்கும் கூட தொடர்பு உண்டு என மேற்கத்திய Choas தியரிக்கு கிழக்கில் நான் புதுவிளக்கம் கொடுத்துக்கொண்டேன் ! அந்த நொடியே அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். எங்களுக

நிதி தருவது மத்திய அரசு ! பெயர் வாங்குவதோ மாநில அரசு ! தூங்கி வழியும் காங்கிரஸ் & பாஜக

ஒரு மருத்துவ கல்லூரி கட்டினால் அதில் 60 சதவீத நிதி மத்திய அரசு தருகிறது. மாநில அரசு பங்களிப்பு 40%. ஏற்கனவே இருக்கும் மருத்துவ கல்லூரியை தரம் உயர்த்த ஆகும் செலவில் மத்திய அரசு 80% நிதியை தருகிறது. மாநில அரசு பங்களிப்பு 20% குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் நான்கு வழிச்சாலை - பணிகளை மேற்கொள்வது தமிழக மாநில நெடுஞ்சாலை துறை. ஆனால் நிதி மொத்தமும் மத்திய அரசு தருகிறது தாம்பரம் - செங்கல்பட்டு 8 வழிச்சாலை - பணிகளை மேற்கொள்வது தமிழக மாநில நெடுஞ்சாலை துறை. ஆனால் நிதி மொத்தமும் மத்திய அரசு தருகிறது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அளிக்கவிருக்கும் நிதி - Rs 63000 கோடி இப்படி பல முக்கிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க (காங்கிரஸ்/பாஜக யார் ஆட்சி செய்தாலும்), எல்லாமே மாநில அரசு நிதியில் தமிழக அரசு தனி ஒருவனாக சாதித்ததை போன்ற ஒரு மாய பிம்பத்தை திமுக, அதிமுக இருவருமே வெற்றிகரமாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.. இந்த பிம்பத்தை உடைக்காத வரை காங்கிரஸ்/பாஜக இரண்டும் தமிழகத்தில் தேவை இல்லாத ஆணிகளாகத்தான் பார்க்கப்படும்...

பொறியியல் கவுன்சிலிங் சொல்லும் செய்தி

Image
இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் முடிவில் எவ்வளவு இடங்கள் நிரம்பியிருக்கின்றன என்று தேடிய பொழுது கிடைத்த தகவல்   அரசு கல்லூரிகளை தவிர்த்து எந்த கல்லூரியிலும் முழுவதுமாக சீட் நிரம்பவில்லை  நிரம்பியிருக்கும் சீட்களும் CSE மற்றும் IT Department தான் நிரம்பியிருக்கின்றன நல்ல கல்லூரி என்று கருதப்பட்ட பல தனியார் கல்லூரிகளில் கூட Mech, Civil, ECE, EEE துறைகள் பெரிய அளவில் நிரம்பவில்லை... Vacant seats in Engineering  Image from Google Search உதாரணமாக - திருச்சி சாரநாதன் கல்லூரி, கோவில்பட்டி National, திண்டுக்கல் PSNA, கோவை ஹிந்துஸ்தான், சேலம் Sona, சென்னை ஜேப்பியர், பனிமலர், SRM வள்ளியம்மை போன்ற கல்லூரிகளில் கூட Mech, ECE, EEE துறை சீட்டுகள் முழுவதுமாக நிரம்பவில்லை  கல்லூரி மற்றும் துறை வாரியாக நிரம்பாமல் இருக்கும் சீட்களை இந்த PDFல் சென்று பார்க்கவும் https://static.tneaonline.org/docs/Academic_Vacancy_After_Supplementary_Counselling.pdf   நான் படித்த அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் IT மற்றும் CSE துறைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. Civil மற்றும் Mech துறைகள் மோசம்..

தூவைநாதர் கோவில் - திருவாரூர் நகரின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்

Image
திருவாரூர் நகரின் மைய பகுதியில் பெரிய தேருக்கு மிக அருகில் (முருகன் தேருக்கு பக்கத்தில்) மோசமான நிலையில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தை பற்றிய பதிவு... ~~~ தூவைநாதர் கோவில் ~~~  இத்திருக்கோயில் குளத்தில் நீராடி இறைவன் மீது "தூவாயா தொண்டுசெய்" என்று துவங்கும் தேவாரப்பாடலை பாடி இழந்த கண்பார்வையை சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பபெற்றார்.. ஆரூர் அமர்ந்த தியாகராஜ சுவாமிக்கு நண்பரான சுந்தர மூர்த்தி நாயனார் நீராடிய திருக்குளத்தின் இன்றைய நிலை வெளியே சொல்வதற்கில்லை... பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒரு அறிவிப்பு பலகை கூட கிடையாது. திருவாரூரில் வாழும் பலருக்கே அது தெரியாது... "இறைவனே நேரில் வந்து அருள்வழங்கும் அளவுக்கு பக்தியில் திளைத்த சுந்தரமூர்த்தி நாயனார் நின்று மனமுருகி தேவாரம் பாடிய அதே இடத்தில் நாம் நிற்கிறோம் என்ற உணர்வே உடலில் சிலிர்ப்பை தருகிறது" அதேசமயம் இப்படி கொண்டாடப்படவேண்டிய கோவில் நகரின் மையப்பகுதியில் இருந்தும் கேட்பாரற்று பாழடைந்து கிடப்பது மனதை உறுத்துகிறது.. தூவைநாதர் கோவில் கூகிள் மேப் தளத்தில்  தூவாயா தொண்டுசெய் தேவாரப்பாடல்  ( https://shaivam.org/thirumur

கோவிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது சரியா ??

கோவிலில்  அர்ச்சகர் தட்டில் எதுக்கு சார் காசு போடவேண்டும். அவர் என்ன கடவுளுக்கும் நமக்கும் இடையில் தூதுவரா என்று கேட்பவர்கள் உண்டு காலை 5 மணிக்கு நடை திறப்பில் இருந்து பால்நெய்வேதனம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை பூஜை, இரவு அர்த்தசாம பூஜை, பிரதோஷம், சதுர்த்தி என கோவிலின் எல்லா நடைமுறைகளும் யார் வந்தாலும் வராவிட்டாலும், மழை, புயல் காலமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அந்த நடைமுறைகளை தினமும் செய்து வருபவர்கள் அர்ச்சகர்கள். அதற்கு நம்மால் முடிந்த காணிக்கையை கொடுக்கிறோம்.  ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம், மருத்துவ செலவுகள், பள்ளி படிப்பு செலவுகள், பெட்ரோல் விலை ஏற்றமெல்லாம் உண்டு. அவர்கள் பிழைப்பு என்பது அந்த தட்டில் விழும் பணத்தை நம்பி இருக்கிறது. முதலில் இந்த பூஜை பிரதோஷங்களே தேவையா என்று தானே கேட்கிறேன் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் உங்களுக்கு கோவில் என்கிற அமைப்பின் வழியாக இறையை தேடமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கோவில் அமைப்பின் மீதே நம்பிக்கையில்லை எனில் அதன் நடைமுறைகளை பற்றி பேச எந்த அனுமதியும்

நோபல் பரிசு வாங்க ஒபாமாவுக்கு தகுதி உண்டெனில் டிரம்ப்க்கு இல்லையா?

Image
நேற்று தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிப்பிரியும் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கார்டூனை ஷேர் செய்திருந்தார். அது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை கிண்டல் அடிக்கும் ஒரு கார்ட்டூன்.. கார்ட்டூன் அல்லது meme வரைவதற்கு humour sense போதும் வரலாறு அல்லது உண்மையை படிப்பததெல்லாம் தேவையில்லை போலும்.. சரி இதற்கு முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் அமைதிப்போராளி பராக் ஒபாமாவின் கதையை பார்த்துவிட்டு ட்ரம்புக்கு நோபல் வாங்க தகுதி இருக்கிறதா என்பதை பற்றி பேசுவோம்.. ~~~~~~~அமைதி ஒபாமா~~~~~~~ அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றது 2009 ஜனவரியில். அதே 2009ல் அக்டோபர் மாதம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.. அதாவது பதவியேற்ற 9 மாதத்தில் அவர் அமைதிக்கு பெரும்பாடு பட்டதாக சொல்லி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.. ஆனால் ஒபாமா ஆட்சியில் பிற நாட்டின் மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் எப்போதும் இருப்பதை விட சற்றும் குறையாமல் நடத்துவந்தன.. அவர் ஆட்சியில் நடந்த சில முக்கிய நடவடிக்கைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.. லிபியாவில் அதிபர் கடாபியை தூக்கியெறிய உள்நா

மேதைகள் கொண்டாடப்படும் அளவுக்குசெயல்வீரர்கள் கொண்டாடப்படுவதில்லை

எல்லா மேதைகளும் செயல்வீரர்களா, காரியத்தை முடிப்பவர்களாக இருந்துவிடுவதில்லை..  காரியம் சாதிக்க தெரியாத மேதைகளால் எந்த பயனுமில்லை.. சில காரியக்கார்கள் மேதைகளாக அறியப்படுவதில்லை. ஏனெனில் யார் மேதை என்பதை மீடியா தான் தீர்மானிக்கிறது.. இதற்கு நான்கு உதாரணங்கள் சொல்கிறேன்.... திரு மன்மோகன் சிங் என்கிற பொருளாதார மேதை 1991ல் காரியம் சாதிப்பவராக இருந்தார். கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தாராளமயமாக்கல் சிந்தனையை வெற்றிகரமாக கொண்டு வந்தார். நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டர். ஆனால் அதே மன்மோகன் சிங் 2009 to 14 லில் வெறும் மேதை என்கிற பட்டதோடு அமைதியாக நேரு குடும்பத்தின் சேவகராக மட்டும் இருந்துவிட்டார். விளைவு கடுமையான பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அவரது அரசை தூக்கியேறிந்தது... திரு ரகுராம் ராஜன் என்கிற பொருளாதார மேதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பொழுது வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தவறினார். இப்பொழுது எதிர்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விட உதவும் வகையில் பேட்டி அளித்துக்கொண்டு சுற்றுகிறார்.. அதேசமயம் வாரக்கடன் பிரச்னையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுத்த திரு உர்ஜித் பட்ட

கொரோனாவால் முடங்கிய மாநில வருவாய்

GST வரம்புக்குள் வராமல் மாநில அரசின் நேரடி வரி விதிப்பில் மிச்சம் இருப்பவை - பெட்ரோல்/டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மதுவிற்பனைக்கு விதிக்கும் வரி. கடந்த ஒரு மாதமாக பெட்ரோல்/டீசல் விற்பனை பெரிய அளவில் இல்லை. நிலம் விற்றல் வாங்கலும் நடக்காததால் பத்திரப்பதிவும் நடைபெறுவதில்லை, தமிழக அரசு மதுக்கடைகளை மூடிவைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் GST வருவாய் பெரிதாக இருக்கும் என தோன்றவில்லை. எனில் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா முடிந்ததும் நாம் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் ஏராளம்...